சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் தலைவர் ஜியாச்சிங்லின் நிறைவுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், நடப்பு கூட்டத்தொடரின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன என்று தெரிவித்தார். கூட்டத்தொடரில், பொருளாதார வளர்ச்சி வழிமுறையை மாற்றுவது, பொருளாதார கட்டமைப்பைச் சீரமைப்பது, மக்கள் வாழ்வை மேம்படுத்துவது, சோஷலிச பண்பாட்டை வளர்ப்பது, சமூக நிர்வாகத்தை வலுப்படுத்துவது, ஹாங்காங் மற்றும் மகெளவின் நீண்டகால நிலைப்பை நிலைநிறுத்துவது, தைவான் நீரிணை இரு கரை உறவின் அமைதி வளர்ச்சியை விரைவுபடுத்துவது முதலிய முக்கிய பிரச்சினைகளை பற்றி, உறுப்பினர்கள் விவாதித்து, குறிப்பிட்டத்தக்க கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்கியுள்ளனர். மக்கள் அரசியல் கலந்தாய்வு என்ற அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயக முறைமையின் தனிச்சிறப்பான மேம்பாட்டை இது போதியளவில் வெளிப்படுத்தியுள்ளது என்றும் ஜியாச்சிங்லின் குறிப்பிட்டார்.