சர்வதேச நாணய நெருக்கடியைக் கையாள சீனா வகுத்துள்ள ஒட்டுமொத்தத் திட்டம் தற்போதைய பிரச்சினையைச் சமாளிப்பது மட்டுமல்ல நீண்டகால வளர்ச்சிக்கும் தேவையானது என்று சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கூறியுள்ளார். 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நெருக்கடி சீனப் பொருளாதாரத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இதைக் கையாள சீனா 4 அம்சங்களைக் கொண்ட ஒட்டுமொத்தத் திட்டத்தை வகுத்துள்ளது. பெருமளவிலான முதலீட்டு ஒதுக்கீடு மற்றும் கட்டமைப்பு வாய்ந்த வரியைக் குறைத்தல் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு மீட்ளும் உயிராற்றலை வழங்குவது உள்ளிட்டவை இந்த ஒட்டுமொத்த திட்டத்தில் அடங்கும்.
இந்த முயற்சியினால் சீனப் பொருளாதாரம் மீட்கப்படுவதில் உலகளவில் சீனா முன்னணியில் உள்ளது. பொருளாதாரக் கட்டுமானத்தில் கடும் பின்னடைவு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது என்று வென்சியாபாவ் தெரிவித்துள்ளார்.