பிரிக் நாடுகளின் ஆலோசனை குழு கூட்டம் 24ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. தற்போதைய உலகப் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றியும், பிரிக் நாடுகள் மற்றும் அவற்றின் ஆலோசனை குழுகளுக்கிடை பயனுள்ள ஒத்துழைப்பு பற்றியும், சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆழமாக விவாதித்தனர்.
2 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டம், ஏப்ரல் திங்களின் நடு பகுதியில் சீனாவின் சான்யா நகரில் நடைபெறவுள்ள பிரிக் நாடுகளின் 3வது தலைவர்கள் சந்திப்புக்கு, ஆலோசனை மற்றும் கொள்கை முன்மொழிவுகளை வழங்கும்.