பிரிக் நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் 25ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது.
பிரிக் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மூன்றாவது சந்திப்பு தொடர்பான யோசனை இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் சீனாவின் ஹைநான் மாநிலத்தின் சான்யா நகரில் இந்த மூன்றாவது சந்திப்பு நடைபெறும். வளர்ச்சி அடைந்துள்ள பொருளாதார நாடுகளில் உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு முறையில் நாள்தோறும் அதிகரித்து வருகின்ற செல்வாக்கும் பயனும் மக்களின் கவனத்தை எட்ட இம்மாநாடு துணை புரியும்.
பிரிக் நாடுகள் கூட்டாக அறிந்து கொண்டு ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் பிரிக் நாடுகள் பற்றிய ஆக்கமுள்ள புரிந்துணர்வை அறியச் செய்ய சர்வதேச சமூகத்துக்கும் இம்மாநாடு துணை புரியும்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60க்கும் அதிகமான நிபுணர்கள் கலந்து கொண்டனர். தற்போதைய சர்வதேச நிலைமை, உலகின் பொருளாதாரக் கட்டுப்பாட்டுப் போக்கை முன்னேற்றுவதிலான பிரிக் நாடுகளின் பங்கு முதலிய பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி விவாதித்து மிகப் பல ஒத்த கருத்துக்களுக்கு வந்துள்ளனர்.