சீனாவின் நாள் ஹெய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தையை ஏப்ரல் 14ம் நாள் சீனா நடத்தும். சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்குவார் என்று, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சியாங்யூ அம்மையார் மார்ச் 31ம் நாள் அறிவித்தார்.
ஹுசிந்தாவின் அழைப்பை ஏற்று, பிரேசில் அரசுத் தலைவர் தில்மா ரூசெப், ரஷிய அரசுத் தலைவர் டிமிட்டிரி மெத்வெதேவ், இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேக்கப் சூமா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வர். சர்வதேச நிலைமை, பொருளாதாரம், நிதி நிலை, வளர்ச்சி முதலிய பிரச்சினைகள் பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறி, பிரிக்ஸ் நாடுகளிடை எதிர்கால ஒத்துழைப்பு பற்றி திட்டமிடுவர்.