• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
Brics நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை
  2011-04-02 19:58:10  cri எழுத்தின் அளவு:  A A A   

நடைபெற உள்ள Brics நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் உலக அறைகூவல்களைச் சமாளிக்கும் துறையில் ஒத்த கருத்துக்களை எட்டி, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்தது. அதே வேளை, இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, பிற Brics நாடுகளின் இரு தரப்பு நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் wu hai long ஏப்ரல் திங்கள் 2ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
Brics நாடுகளின் 3வது தலைவர்கள் பேச்சுவார்த்தை, ஏப்ரல் திங்கள் 14ம் நாள் சீனாவின் hai nanஇல்லுள்ள san ya நகரில் நடைபெறும். இது குறித்து, சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர் கூட்டத்தைச் சீன வெளியுறவு அமைச்சகம் நடத்தியது. எதிர்காலத்தை முன்னாய்வு செய்து, கூட்டாக செழுமையை அனுபவிப்பது, இப்பேச்சுவார்த்தையின் தலைப்பாகும். தற்போதைய சர்வதேச நிலை, சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினை ஆகியவை பற்றிய கருத்துக்களை ஹூசிந்தாவ் முழுமையாக விளக்கிக் கூறுவார். சீனாவின் வளர்ச்சி நிலை குறித்தும் அவர் எடுத்துக்கூறுவார் என்று அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040