ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், ஏற்றுமதி வணிகப் பொருட்களின் தரத்தை உயர்த்த வேண்டுமென அண்மையில், இலங்கையின் தொழிற்துறை மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அதே வேளை, வணிகப் பொருட்களின் ஏற்றுமதிச் சந்தையின் பல்வகைக் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். பாரம்பரிய ஐரோப்பிய அமெரிக்கச் சந்தையை வலுப்படுத்தும் அடிப்படையில், ஆசியச் சந்தை குறிப்பாக, சீன மற்றும் இந்தியச் சந்தையையும் ஆக்கமுடன் வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வர்த்தகத் துறையில் அரசுக்கு கொள்கைக் முன்மொழிவு வழங்கும் வகையில், 20 சிறப்பு நிறுவனங்களை இலங்கை அரசு உருவாக்கும் என்று அமைச்சர் பதியுதீன் தெரிவித்தார்.