ஆசிய மற்றும் உலகில், குறிப்பாக ஆசியாவில் மிக விரைவாகப் பொருளாதாரம் வளரும் நாடாக சீனா திகழ்கிறது. BRICS நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடு இந்நாட்டில் நடைபெறுவது, BRICS உறுப்பு நாடுகளைப் பொறுத்தவரை, மிகவும் ஊக்கம் தரக்கூடியது. சர்வதேச அரசியல், பொருளாதாரம், நிதி நிலைமை, வளர்ச்சிப் பிரச்சினை, உறுப்பு நாடுகளுக்கிடை பொருளாதார ஒத்துழைப்பு முதலியவற்றை பற்றி, இதர BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் அமைதியான வளர்ச்சி, BRICS நாடுகளின் ஒத்துழைப்புக்கு மட்டுல்ல, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும். இரு நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகரிப்பு, மக்கள் மற்றும் உலக பொருளாதாரத்தின் தேவைகளை நிறைவு செய்யும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.