இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் சீனா சென்றடைந்து, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஏப்ரல் 12ம் நாள் சீனாவுக்கு வருகை தருவார். இந்த நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை இவ்வுச்சிமாநாடு வலுப்படுத்துமென இந்தியா நம்புகின்றது.
சர்வதேச நிலைமை, சர்வதேசப் பொருளாதார பிரச்சினை, வளர்ச்சிப் பிரச்சினை, பிரிக்ஸ் நாடுகளிடை ஒத்துழைப்பு ஆகியவை இந்த உச்சிமாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் கூறினார்.
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தையை hai nan மாநிலத்தின் san ya நகரில் ஏப்ரல் 14ம் நாள் சீனா நடத்தும். சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்குவார். அழைப்பின் பேரில், பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள், இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வர்.