நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது
2011-04-12 09:29:20 cri எழுத்தின் அளவு: A A A
இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் ஏப்ரல் 12ம் நாள் சீனாவின் san ya நகர் வந்தடைந்து, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார். இப்பேச்சுவார்த்தையின் மூலம், BRICKS நாடுகளுடன் பல்வேறு ஒத்துழைப்புகளை மேலும் நெருக்கமாக வலுப்படுத்த விரும்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏப்ரல் 11ம் நாள் தெரிவித்தது. தற்போதைய உலகின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து, பல்வேறு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இந்தியா விரும்புகிறது. நிலைப்பாட்டை ஒருங்கிணைத்து, ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Vishnu Prakash கூறினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கும் சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவும் தனியே பேச்சுவார்த்தை நடத்துவர். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு முதலிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார விவகாரச் செயலர் Manbir Singh தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்