பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய BRICS நாடுகளின் முதன் முறை பொருளாதார வர்த்தக அமைச்சர்கள் கூட்டம், ஏப்ரல் 13ம் நாள் சீனாவின் ஹய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது. ஒன்றுக்கொன்று வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கி, பல்வகை வர்த்தக பாதுகாப்புவாதத்தை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்பதை இந்நாடுகளின் அமைச்சர்கள் ஏற்றுகொண்டுள்ளனர் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சீன வணிக துறை அமைச்சர் chendeming குறிப்பிட்டார்.
20 நாடுகள் குழு, கால நிலை மாற்றப் பேச்சுவார்த்தை, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை முதலிய பல தரப்புத் துறைகளிலுள்ள தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் நலன்களை தொடர்ந்து பாதுகாக்க BRICS நாடுகள் பாடுபட வேண்டும் என்றும் chendeming தெரிவித்தார்.