2011ம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய BRICS நாடுகளின் தொழில் மற்றும் வணிக கருத்தரங்கு 13ம் நாள் சீனாவின் ஹய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது. இந்நாடுகளின் அரசியல், தொழில் மற்றும் வணிகத் துறையின் சுமார் 500 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
புதியதாக வளரும் சந்தையான நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும். BRICS நாடுகளின் வளர்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி, எரியாற்றல் மூலவளப் பயன்பாடு, தொடரவல்ல வளர்ச்சி, நுகர்வுச் சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி முதலியவை குறித்து, இதில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் விவாதித்து, பரந்தளவில் பொது கருத்துகளை எட்டியுள்ளனர்.