"Bo ao ஆசிய மன்றத்தின் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான 2011ம் ஆண்டு அறிக்கை" ஏப்ரல் 13ம் நாள் வெளியிடப்பட்டது. நிதி நெருக்கடி ஏற்பட்ட பின், புதிதாக வளர்ச்சி பெற்ற வளரும் நாடுகளுக்கு, சர்வதேச விவகாரங்களில் கிடைத்துள்ள தகுநிலை முன்கண்டிராத அளவில் வலுப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துவங்கிய சர்வதேச நிதி நெருக்கடி உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுத்தி வளர்ந்த நாடுகளை நேரடியாக பாதித்தது. உலக அமைப்பில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. பொருளாதார நிதி நெருக்கடி சமாளிப்பு, உலக காலநிலை மேம்பாடு, காலநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு முதலிய முக்கிய சர்வதேச விவகாரங்களில் வளரும் நாடுகள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்தன. உலக பொருளாதாரம் மேலும் நியாயமான தொடரவல்ல வளர்ச்சித் திசையை நோக்கி வளர்வதை அவை முன்னேற்றுகின்றன என்று இவ்வறிக்கை தெரிவித்தது.