பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தை 14ம் நாள் சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார். பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் தலைவர்கள் அழைப்பின் பேரில், இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின், பிரிக்ஸ் நாடுகள் சான்யா அறிக்கையை வெளியிட்டன.
பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, இந்த ஐந்து நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும். அது மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் துணை புரியும். பிரிக்ஸ் நாடுகள், கூட்டு நலன்களை உறுதியாக பேணிக்காத்து, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ளார்ந்த ஒத்துழைப்பு ஆற்றலை வளர்க்க வேண்டும் என்று ஹூசிந்தாவ் தமது உரையில் குறிப்பிட்டார்.
20 நாடுகள் குழு நிர்ணயித்த சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்த இலக்கை பிரிக்ஸ் நாடுகள் ஆதரிக்கின்றன என்று சான்யா அறிக்கையில் பிரிக்ஸ் நாடுகள் சுட்டிக்காட்டின. சர்வதேச பொருளாதார மற்றும் நாணய கட்டமைப்பின் மாற்றங்கள், உலகப் பொருளாதார நிலைமையின் மாற்றத்துக்கிணங்க அமைய வேண்டும். குறிப்பாக, புதிய வளரும் பொருளாதாரங்கள் மற்றும் வளரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று அவை மீண்டும் வலியுறுத்தின.