பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தை, ஏப்ரல் 14ம் நாள் சீனாவின் hai nan மாநிலத்திலுள்ள san ya நகரில் துவங்கியது. இப்பேச்சுவார்த்தைக்குச் சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் தலைமை தாங்குவார். அழைப்பின் பேரில், இப்பேச்சுவார்த்தையில் பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் தலைவர்கள் கலந்து கொள்வர். BRIC என்ற நாண்கு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு முறைமையில் ஐந்தாவதாக தென்னாப்பிரிக்கா சேர்ந்த பிறகு, BRIC நாடுகள் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது. தலைவர்களிடை பேச்சுவார்த்தையில் தென்னாப்பிரிக்காவின் தலைவர் முதன்முறையாக இப்போது கலந்து கொள்கிறார்.
எதிர்காலத்தை முன்நோக்கி பார்த்து, செழுமையைக் கூட்டாக அனுபவிப்பது, இப்பேச்சுவார்த்தையின் தலைப்பாகும். சர்வதேச நிலைமை, சர்வதேசப் பொருளாதார மற்றும் நாணயப் பிரச்சினை, வளர்ச்சிப் பிரச்சினை, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர்.