பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தை, ஏப்ரல் 14ம் நாள் சீனாவின் hai nan மாநிலத்திலுள்ள san ya நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் துவக்கக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார். தற்போது, பல்வேறு நாடுகள் அரிய வளர்ச்சி வாய்ப்புகளைச் சந்தித்த அதேவேளையில், பல அறைகூவல்களையும் எதிர்நோக்குகின்றன என்று அவர் கூறினார். அமைதி, கூட்டுச் செழுமை ஆகியவை படைத்த 21வது நூற்றாண்டை உருவாக்க, பல்வேறு தரப்புகள் உலக அமைதியை முயற்சியுடன் பேணிக்காத்து, பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டும். சர்வதேச ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் விரிவாக்கி, பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாளியுறவை வலுப்படுத்த வேண்டும் என்று ஹு சிந்தாவ் தமது உரையில் வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு இந்த 5 நாடுகளின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும் அதேவேளையில், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் நலன் தரும் என்று அவர் கூறினார்.
சீனாவின் வளர்ச்சி உலக வளர்ச்சியில் ஒரு பகுதியாகும். சீனாவின் சிறந்த வளர்ச்சி உலகத்துக்கு அதிக பங்காற்றும். சீனாவின் வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் பங்கெடுத்து, சீனாவின் வளர்ச்சி வாய்ப்பைப் பகிர்ந்து கொள்வதை சீனா வரவேற்பதாகவும் தலைவர் ஹு சிந்தாவ் தெரிவித்தார்.