போஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டு கூட்டம் 15ம் நாள் முற்பகல் ஹாய்னான் மாநிலத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் துவக்க விழாவில் தலைமை உரை நிகழ்த்தினார். ரஷியா மற்றும் பிரேசில் அரசுத் தலைவர்கள், தென் கொரிய தலைமை அமைச்சர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
ஒட்டுமொத்த வளர்ச்சி: கூட்டு திட்டங்களும் புதிய அறைகூவல்களும் என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். அரசு, தொழில் நிறுவனங்கள், கல்வித் துறை, செய்தி ஊடகங்கள் முதலியவற்றுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலம், ஆசியப் பொருளாதாரத்தின் உரிய மேம்பாட்டுக்கு முன்னாய்வு நெடுநோக்குடன் கருத்துக்களை வழங்குவது அதன் இலக்காகும்.
மேலும் இவ்வாண்டு போஆவ் ஆசிய மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.