இந்தியாவின் Punjab மாநிலத்து Chandigarh நகரில், சீன-இந்திய பொருளாதார வளர்ச்சி, உலகிற்கு செல்வாக்கு என்ற தலைப்பிலான ஆய்வுக் கூட்டம் ஒன்றை, சீனாவின் நண்பர் சங்கம் 17ம் நாள் நடத்தியது. இந்தியாவுக்கான சீனாவின் துணை தூதர் zhangyue இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். சீனாவின் 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சங்களை அவர் எடுத்துக்கூறினார். இரு நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார்.
தவிர, இரு நாட்டு உறவை வளர்த்து, சர்வதேசத் துறைகளில் இரு தரப்பின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது முதலியவை பற்றி, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதிகளுடன் இணைந்து அவர் கருத்துகளைப் பரிமாறிகொண்டார்.