ஏப்ரல் 28ம் நாள் முதல், அக்டோபர் 22ம் நாள் வரையான, சி ஆன் உலகத் தோட்டக்கலைப் பொருட்காட்சி காலத்தில், 5000 முதல் 7000 கலை நிகழ்ச்சிகள் வரை நடைபெறும். பார்வையாளர்கள், மலர்கள் மற்றும் தோட்டக்கலையை ரசிப்பதோடு, பல்வகை கலை நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழலாம் என்று சி அன் உலகத் தோட்டக்கலைப் பொருட்காட்சி ஒருங்கிணைப்புக் குழு 25ம் நாள் தெரிவித்தது.
சி ஆன் உலகத் தோட்டக்கலைப் பொருட்காட்சி காலத்தில், நாள்தோறும் 30 நிகழ்ச்சிகள் நடைபெறும். தவிரவும், அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், சிறப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.