தாய்நாட்டைப் பேணிக்காக்கும் போர் வெற்றி வெற்ற 66வது ஆண்டு நிறைவை ரஷியா கொண்டாடும் வேளையில் நான்கிங்கின் நினைவு என்ற தலைப்பிலான சீனாவை ஆக்கிரமித்த ஜப்பான் படையினர் நான்கிங்கில் மேற்கொண்ட படுகொலையின் வரலாற்று கண்காட்சி 7ம் நாள் மாஸ்கோவில் துவங்கியுள்ளது. ஜப்பான் ஆக்கிரமிப்பு படைப் பிரிவுகள் சீனாவின் நான்கிங்கில் இழைத்த படுகொலை வரலாற்று உண்மை ரஷியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் சுதந்திர நாடுகள் கூட்டமைப்பில் 3 திங்கள் காலம் காட்சிக்கு வைக்கப்படும்.
260க்கும் அதிகமான வரலாற்று நிழற்படங்கள், எழுத்துக்கள், பெரும் எண்ணிக்கையிலான தொல் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் நான்கிங்கில் நிகழ்ந்த படுகொலை, 1945ம் ஆண்டில் அங்கே நடைபெற்ற ஜப்பான் படை சரணடைந்த விழா, ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் முதலியவை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
1937ம் ஆண்டு டிசெம்பர் 13ம் நாள் முதல் 1938ம் ஆண்டு ஜனவரி திங்கள் வரையான காலகட்டத்தில் சீனாவை ஆக்கிரமித்த ஜப்பான் படைப் பிரிவுகள் நான்கிங்கில் சீன மக்களைப் படுகொலை செய்தன. நான்கிங் நகரில் சுமார் மூன்றில் ஒரு பகுதி கட்டிடங்கள் நாசமாக்கப்பட்டன. 3 லட்சத்துக்கு மேலான மக்கள் கொல்லப்பட்டனர்.