சீனாவின் யான்தை நகரக் கட்டுமானக் குழு இலங்கையில் கட்டிமைத்த நாடக கலையரங்கம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. இரு நாடுகளின் அரசுகளிடை ஒப்படைப்பு நிகழ்வு மே திங்களுக்குள் நடைபெறும் என்று அறியப்படுகிறது.
இலங்கை தேசிய நாடக கலையரங்கம் அதன் தலைநகரான கொழும்பில் அமைந்துள்ளது. 2008ம் ஆண்டு ஜுலை திங்கள் கட்டியமைக்கப்பட துவங்கிய இந்தத் திட்டப்பணி இவ்வாண்டு ஏப்ரலில் முடிக்கப்பட்டது.