சீனக் கல்வியமைச்சகம் துறை உள்ளிட்ட தொடர்புடைய வாரியங்கள் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி மேற்குப் பகுதிக்கான 2011ம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களின் தன்னார்வச் சேவைத் திட்டம் மேலும் செவ்வனே நடைமுறைப்படுத்தப்படும். உயர் நிலை கல்வி பெற்ற பட்டதாரிகள் மேற்கு பகுதிக்குச் சென்று தொழில் நடத்த ஊக்குவிக்கப்படுவர்.
இவ்வாண்டு மேற்குப் பகுதிக்கான சேவைத் திட்டத்துக்கு 17 ஆயிரத்து 600 திறமைசாலிகள் தேவை. இத்தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 2600 அதிகரித்தது. புதிதாக அதிகரித்துள்ள இந்த 2600 பேர் சின்ச்சியாங் மற்றும் திபெத் தன்னாட்சிப் பிரதேசங்களில் சேவை புரிவர். தன்னாட்சிப் பிரதேசங்களில் தன்னார்வச் சேவை புரிவோரின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்தை அடையும்