இவ்வாண்டின் மே 23ம் நாள், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவு நாளாகும். இந்நாளில் திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்கள் லாசா நகரின் போத்தலா மாளிகைச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, தேசியக் கொடியை ஏற்றி, நாட்டுப்பண்ணைப் பாடினர். திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக விடுதலை பெற்ற நினைவுத் தூபிக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.