மே 23ம் நாளாகிய இன்று சீனாவின் திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவு நாளாகும். இதை முன்னிட்டு லாசாவுக்கான நேபாளத்தின் துணை நிலை தூதர் Ngaindra Upadhya தொலை பேசி மூலம் சீன வானொலி செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது திபெத்திலான வளர்ச்சி சாதனைகளைப் புகழ்ந்து பாராட்டினார். இன்றைய திபெத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. சமூகம் நிதானமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. மக்கள் இன்பமாக வாழ்கின்றனர். மத சுதந்திரம் காணப்படுகின்றது. திபெத் அதன் வரலாற்றில் மிகப் பொற்காலத்தில் உள்ளது என்று அவர் திபெத்தை மதிப்பிட்டுள்ளார்.
திபெத்தின் வளர்ச்சி நேபாளத்துக்குப் பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிங்காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்கு தொடங்கிய பின், மேலும் அதிகமான பல்வேறு நாடுகளின் பயணிகள் திபெத் வழியாக நேபாளத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாண்டு நேபாளத்தின் சுற்றுலா ஆண்டாகும். திபெத் அமைதியான விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவின் போது நேபாளத்துக்கும் திபெத்துக்குமிடை சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புவதாக துணை நிலை தூதர் Ngaindra Upadhya தெரிவித்துள்ளார்.