23ம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசம் அமைதியாக விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவு நாளாகும். அதே நாள் காலையில், திபெத்தின் ழிகாச் வானொலிச் சேவை அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டது. ழிகாச் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது வானொலி இதுவாகும். இந்த வானொலி நிலையம் உலகில் மிக உயரமான இடத்திலுள்ள வானொலி நிலையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ழிகாச் நகரம் கடல் மட்டத்திலிருந்து 3,850 மீட்டர் உயரத்தில் உள்ளது. அது திபெத்தின் 2வது பெரிய நகரமாகும். சுமார் 7 இலட்சம் மக்கள் புதிய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிக்கலாம் என்று தெரிகிறது.இதுவரை திபெத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகளை அனுபவிக்கும் மக்கள் தொகை மொத்த திபெத் மக்கள் தொகையில் வகிக்கும் விகிதம் 90 விழுக்காட்டை தாண்டியுள்ளது.