திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்றதன் 60ஆம் ஆண்டு சாதனை கண்காட்சி ஜூலை 18ம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினரும், துணை அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவருமான Xi Jin Ping இக்கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Padma Tsinle துவக்க விழாவுக்குத் தலைமை தாங்கினார். திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் Qiangba Puncog இவ்விழாவில் உரை நிகழ்த்தினார். துணை அரசுத் தலைவர் Xi Jin Ping உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பிரதிநிதிக்குழு உறுப்பினர்கள் பேரார்வத்துடன் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.