சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணை அரசுத் தலைவருமான நடுவண் அரசின் பிரதிநிதிக் குழுத் தலைவர் ஷுச்சின்பிங் கட்சிப் பொதுச் செயலாளர் ஹுச்சிந்தாவின் சார்பில் 18ம் நாள் பிற்பகல் மதத் துறையில் புகழ் பெற்ற நாட்டுப்பற்றாளர் Pagbalha Geleg Namgyai அவர்களையும் திபெத்தின அலுவலர் Raidi அவர்களையும் சந்தித்து அவர்களுக்கு அன்பான வணக்கங்களை தெரிவித்தார்.
திபெத்தின மூத்த தலைவர் என்ற முறையில் அவர்கள் திபெத்தின மக்களிடையில் பெற்றுள்ள உயர்ந்த செல்வாக்கையும் புதிய திபெத்தின் கட்டுமானத்தில் ஆற்றிய முக்கிய சாதனைகளையும் ஷுச்சின்பிங் சந்திப்பின் போது குறிப்பிட்டு பாராட்டினார். கட்சி மற்றும் நடுவண் அரசு அவர்களை மறக்கவில்லை என்று ஷுச்சின்பிங் வலியுறுத்தினார்.
Pagbalha Geleg Namgyai, Raidi இருவரும் கட்சி மத்திய கமிட்டியின் அன்புக்கு நன்றி தெரிவித்தனர். திபெத்தின் பாய்ச்சல் வளர்ச்சியையும் நீண்டகால இயல்பான அமைதியையும் நனவாக்க மேலும் கூடுதலாக பங்கு ஆற்றும் விருப்பத்தை அவர்கள் சந்திப்பின் போது தெரிவித்தனர்.