9வது பெய் தோ வழிகாட்டல் செயற்கைக் கோள் சி சான் ஏவு மையத்திலிருந்து Longmarch 3-A என்ற ஏவூர்தி ராகெட்டு மூலம் 27ம் நாள் விடியற்காலை 5:44 மணியளவில் திட்டமிடப்பட்ட புவியின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சீனாவின் பெய் தோ வழிகாட்டல் தொகுதியைச் சேர்ந்த 4வது புவி நிலை செயற்கைக்கோள் இதுவாகும்.
பெய் தோ வழிகாட்டல் தொகுதி, சீனா மற்றும் அதன் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு வழிகாட்டல் சேவை புரிந்து, போக்குவரத்து, மீன்பிடித்தல், வனத் தொழில், வானிலை, செய்தித் தொடர்பு முதலிய துறைகளில் இதனை பயன்படுத்துவோரின் தேவைகளை நிறைவேற்றும்.
2020ம் ஆண்டுக்குள், பெய் தோ வழிகாட்டல் தொகுதியில் 30க்கு மேற்பட்ட செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டு அத்தொகுதி முழுமையடையும் என்று தெரிகிறது.