திபெத்தில் தன்னார்வ மருத்துவச் சேவை புரிவது பற்றிய நாடளவிலான பொது நல நடவடிக்கை 28ம் நாள் துவங்கியது. 20 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களைச் சேர்ந்த 300க்கு அதிகமான மருத்துவப் பணியாளர்கள் திபெத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.
இதய மற்றும் இரத்தக் குழாய், நரம்பு, கண், மகளிர் முதலிய மருத்துவத் துறை சிறப்பு மருத்துவர்கள் அவர்களில் அடங்குவர். லாசா, ஷிகாட்சே, சானான், லிங்ச்சி, ஆலி முதலிய பிரதேசங்களில் அவர்கள் திபெத் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பர்.
முன்னதாக, திபெத்திலிருந்து வந்த பிறவி இதய நோயுடைய 11 குழந்தைகள் பெய்ஜிங்கில் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.