இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்ற விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கான வீட்டுவசதிக் கட்டுமானத்துக்கும் நிலநடுக்கத்தை எதிர்த்து நிற்கும் திட்டப்பணிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 101 கோடியே 40 லட்சம் யுவானை எட்டியது. இந்தத் தொகை முழுப் பிரதேசத்திலும் வாழ்கின்ற 63 ஆயிரத்து 928 குடும்பங்களின் வீட்டுவசதிக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2 லட்சம் குடும்பங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்கின்ற 23 ஆயிரத்து 100 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குடிநீர்ப் பாதுகாப்புப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது.