திபெத்தின் பண்பாட்டு மரபுச் செல்வங்கள், முக்கிய வரலாற்றுக் காட்சிகள், தொல் பொருட்கள் முதலியவற்றைப் பாதுகாக்கும் வகையில், 1978ம் ஆண்டு முதல் இது வரை, 145 கோடி யுவானை சீனா ஒதுக்கியுள்ளது. சீனத் தேசிய தொல் பொருள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் shanjixiang அண்மையில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் இதைத் தெரிவித்தார்.
திபெத்தின் தொல் பொருள் பாதுகாப்புப் பணி, சீன தொல் பொருள் இலட்சியத்தின் வளர்ச்சி வரலாற்றில் மிக உயர் நிலை, மிக அதிக ஒதுக்கீடு மற்றும் மாபெருமளவு வாய்ந்த தொல் பொருள் பாதுகாப்புத் திட்டப்பணியாக விளங்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.