சீனாவும் இந்தியாவும் கூட்டாக முதலீடு செய்து அமைத்த சிந்திய இரும்புருக்கு தொழில் நிறுவனத்தின் துவக்க விழா அண்மையில் பெங்களுர் நகரில் நடைபெற்றது. இந்தியாவில் முதலீடு செய்த சீனத் தொழில் நிறுவனம் ஒன்றின் முதலாவது இரும்புருக்கு உற்பத்தித் திட்டப்பணி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதை இது குறிக்கிறது.
இந்தியாவின் கர்னாடக மாநிலத்தின் முதல் அமைச்சர் சதனாதா கௌடா உரை நிகழ்த்தியபோது, சீனாவின் முதலீடுகளுக்கு வரவேற்பு தெரிவித்ததார். மேலும், இந்தியாவில் குறிப்பாக கர்னாடக மாநிலத்தில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
சிந்திய இரும்புருக்கு தொழில் நிறுவனம், முதல்முறையாக இந்திய இரும்புருக்கு துறையில் முதலீடு செய்த சீனத் தொழில் நிறுவனமாகும். மிக அதிக உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்ட இந்திய சந்தையை நோக்கி எடுக்கப்பட்ட முதல் காலடியாக இது கருதப்படுகிறது.