2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, திபெத் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத்தை திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு பெரிதும் விரைவுபடுத்தும்.
2009ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், "திபெத் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் திட்டப்பணி" அரசவை நிரந்தர கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்திட்டப்பணிக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை 1550 கோடி யுவானாகும். திட்டப்படி, உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு, உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானம், ஆதரவு உத்தரவாதம் ஆகிய மூன்று வகைகளைச் சேர்ந்த பத்து திட்டப்பணிகள் நடைமுறைக்கு வரும்.
திட்டப்பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான காடுகள், ஆறுகள், ஏரிகள், புல் வெளிகள், சதுப்பு நிலங்கள், பனி வயல்கள், பனி மலைகள், வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன.