கடந்த சில ஆண்டுகளில், சீன-இந்திய உறவு பன்முகமாக வளர்ந்து வருகிறது. இரு நாடுகளின் சுற்றுலா ஒத்துழைப்பு முன்னேற்றப் போக்கு சீராக இருக்கிறது. தத்தமது சுற்றுலாச் சந்தையில் பயணிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கும் நாடுகளாக சீனாவும் இந்தியாவும் மாறியுள்ளன. இந்தியாவுக்கான சீனத் தூதர் zhangyan 6ம் நாள், புதுதில்லியில், சீனாவின் ஹெநான் மாநிலத்தின் சுற்றுலா பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
2010ம் ஆண்டு, சீனாவில் பயணம் மேற்கொண்ட இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 73 ஆயிரமாகும். இரு நாடுகளின் சுற்றுலாப் பரிமாற்றம் முக்கிய முன்னேற்றமடைந்துள்ளது. இவ்வாண்டின் முதல் பாதியில், பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 52 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 11.8 விழுக்காடு அதிகரிமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.