ஐ.நா பாதுகாப்பவையின் கண்டிப்பு
2011-09-08 10:03:34 cri எழுத்தின் அளவு: A A A
இந்திய தலைநகர் புதுதில்லியில் உயர் நீதி மன்றத்தின் வாயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை ஐ.நா பாதுகாப்பவை அறிக்கை ஒன்றில் வன்மையாகக் கண்டித்தது.அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளும், எந்த இடத்திலும், எந்த நோக்கிற்காகவும், யாரால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை குற்றச்செயல்களாகும். இவற்றுக்கான தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது என்று அறிக்கை கூறியது. அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் தாக்கும் மனவுறுதியை பாதுகாப்பவை மீண்டும் வலியுறுத்துவதாக அறிக்கை கூறியது.7ம் நாள் முற்பகல் புதுதில்லியின் உயர் நீதிமன்றத்தின் 5வது வாயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமுற்றனர்.
தொடர்புடைய செய்திகள்