இவ்வாண்டின் முதல் எட்டு திங்களில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா துறை தொடர்ந்து வளர்ந்துள்ளது. அங்கே சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கையும் வருமானமும் வரலாற்றில் முன்கண்டிராத அளவை உருவாக்கியுள்ளன என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்த்தின் சுற்றுலா ஆணையம் அண்மையில் வெளிப்படுத்தியது.
ஜனவர் முதல் ஆகஸ்ட் திங்கள் வரையான காலத்தில் 62 லட்சத்து 10 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் அதேகாலத்தில் இருந்ததை விட 22.1 விழுக்காடு அதிகரித்தது. மொத்தம் 634 கோடி யுவான் வருமானம் பெறப்பட்டது. கடந்த ஆண்டின் அதேகாலத்தில் இருந்ததை விட இது 42.7 விழுக்காடு அதிகமாகும்.