2011ம் ஆண்டு தெற்காசிய மற்றும் சீனத் தயாரிப்புப் பொருட்களின் கண்காட்சி 15ம் நாள் நேபாளத்தின் காட்மாண்ட்டில் துவங்கியது. நேபாள-சீன பொருளாதார வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய இந்த கண்காட்சி 19ம் நாள் வரை நடைபெறுகிறது. நேபாள-சீன பொருளாதார வர்த்தகத் தொடர்பு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இரு நாட்டுறவின் வளர்ச்சியுடன், இரு தரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புறவு மேலும் உயரும் என்று நேபாள துணை அரசுத் தலைவர் பரமனந்தா ஜாவ தெரிவித்தார்.
நேபாளத்தின் சிறப்புமிக்க நிலவமைவு மேம்பாட்டை வெளிக்கொணர்வதன் மூலம், சீன மற்றும் தெற்காசிய பொருளாதார வர்த்தக நடவடிக்கைளின் தொடர்பு மையமாக நேபாளம் மாற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.