18ம் நாளிரவு, இந்தியாவில் ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசெ பிரதேசத்தின் yadong மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்தன. இம்மாவட்டத்தில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அங்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள பணிக் குழு, 19ம் நாள் விடியற்காலையில் அறிவித்தது.இந்த நிலநடுக்க அதிர்வு இப்பிரதேசத்தின் மொத்த 18 மாவட்டங்களில் சுமார் 15 மாவட்டங்களிலும் ஒரு நகரும் அதிர்வு உணரப்பட்டது. இது வரை, நிலநடுக்க போரிடர் தடுப்புக்கான 2வது நிலை எச்சிரிக்கை துவங்கியது. முதலாவது நிவாரணப் பணிக் குழு, yadong, gangba முதலிய மாவட்டங்களுக்கு விரைந்து சென்றது என்று சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிலநடுக்க விவகார ஆணையம் 18ம் நாள் அறிவித்தது.