இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் 18ம் நாளிரவு நிகழ்ந்த ரிக்டர் அளவையில் 6.8ஆக பதிவான நிலநடுக்கத்தால், சீனத் திபெத்தின் யாதுங் வட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை சுமார் 3000 வீடுகள் வேறுபட்ட அளவில் பாதிக்கப்பட்டன. சுமார் 14 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர் என்று திபெத் யாதுங் வட்டத்தின் நிலநடுக்க மீட்புதவிப் பணி தலைமையகம் அறிவித்தது.
மேலும் திபெத் இராணுவப் பிரதேசத்தின் படைவீரர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துச் சென்று உதவியளித்தனர். மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பருத்திப் போர்வை, உணவுப் பொருட்கள், கூடாரங்கள் முதலிய மீட்புதவிப் பொருட்களும் அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டன.