• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியா, பிரேசி்ல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வேண்டுகோள்
  2011-10-19 10:31:34  cri எழுத்தின் அளவு:  A A A   
வளரும் நாடுகளின் உரிமை நலன்களை வெளிப்படுத்த, ஐ•நா உட்பட்ட சர்வதேச நிறுவனங்களின் சீர்த்திருத்தத்தை விரைவுபடுத்துமாறு இந்தியா, பிரேசி்ல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் 18ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் Pretoria நகரில் வெளியிட்ட கூட்டறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தன.

இந்தியா, பிரேசி்ல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் 5வது உச்சிமாநாடு 18ஆம் நாள் Pretoriaவில் நடைபெற்றது. இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங், பிரேசில் அரசுத் தலைவர் Dilma Rousseff, தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் Jacob Zuma ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ஐ•நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வளரும் நாடுகளுக்கு மேலும் அதிகமான வாய்ப்புக்களை வழங்குமாறு ஐ•நாவுக்கு இந்த உச்சிமாநாட்டின் அறிக்கை வேண்டுகோள் விடுத்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040