இந்தியா, பிரேசி்ல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் 5வது உச்சிமாநாடு 18ஆம் நாள் Pretoriaவில் நடைபெற்றது. இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங், பிரேசில் அரசுத் தலைவர் Dilma Rousseff, தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் Jacob Zuma ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ஐ•நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வளரும் நாடுகளுக்கு மேலும் அதிகமான வாய்ப்புக்களை வழங்குமாறு ஐ•நாவுக்கு இந்த உச்சிமாநாட்டின் அறிக்கை வேண்டுகோள் விடுத்தது.