அக்டோபர் 20ஆம் நாளிரவு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி க்ளிண்டன் அம்மையார் இஸ்லாமாபாத் சென்றடைந்து, பாகிஸ்தானில் 2 நாட்கள் நீடிக்கும் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.
தற்போது, பதற்ற நிலையில் சிக்கியுள்ள அமெரிக்க-பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவது, நாடு கடந்து, ஆப்கானிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுப்பது ஆகியவை அவரது பயணத்தின் நோக்கமாகும் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
பயணத்தின் போது, பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தலைமையமைச்சர் யூசுப் ராசா கிலானி, தரைப்படையின் முதன்மைத் தலைவர் கயானி உள்ளிட்ட பாகிஸ்தான் அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களின் முக்கிய தலைவர்களுடன் ஹிலாரி க்ளிண்டன் அம்மையார் பேச்சுவார்த்தை நடத்துவார்.