சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் ஏ பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி நட்பு பிரதிநிதிக் குழு அக்டோபர் 20 முதல் 23ம் நாள் வரை நேபாளத்தில் பயணம் மேற்கொண்டது. பயணத்தின் போது, இப்பிரதிநிதிக் குழு, நேபாளத்தின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. சீன நேபாள உறவு, இரு கட்சிகளுக்கிடையிலான பரிமாற்றம், நேபாள நிலைமை ஆகியவை குறித்து இருத்தரப்பும் கருத்துகளை பரிமாறின.
சீன நேபாள நட்புறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்கும் கூட்டு விருப்பத்துக்கும் பொருந்தியது என்று ஏ பிங் தெரிவித்தார்.