வட கொரியாவில் நட்புப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற சீனத் துணை தலைமையமைச்சர் லீ க்ச்சியாங் பியங்னியாங் நட்புக் கோபுரத்தை திறந்து வைத்தார். சீன மக்கள் தொண்டர் படைத் தியாகிகளின் நினைவிடத்தில் மலர் வளையங்களை வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
நட்புக் கோபுர திறப்பு விழா அமைதி பெறுவது கடினமானது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது. நாட்டின் கட்டுமான வளர்ச்சிச் சாதனைகளை மதித்து அமைதியின் நிதானத்தைப் பேணிக்காப்பது பொது கடப்பாடாகும் என்று லீ க்ச்சியாங் தெரிவித்தார்.