அக்டோபர் 24ம் நாள், ஐ.நா நாளாகும். உலகின் 700 கோடி மக்கள், ஒரே நோக்கத்துக்கு ஒன்றுப்பட்டு, உலக அறைகூவல்களை சமாளிக்க வேண்டும் என்று ஐ.நா நிறுவப்பட்ட 66வது ஆண்டு நிறைவு நாளின் போது அதன் தலைமைச் செயலர் பான் கி மூன் வெளியிட்ட உரையில் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது, பொருளாதார நெருக்கடி, வேலையற்றோர் விகிதம் உயர்வு, காலநிலை மாற்றம் ஆகிய அறை கூவல்களை உலகம் எதிர்நோக்குகின்றது. அவை, உலகளவில் சமாளிக்கும் வழிமுறையில் தான் தீர்க்கப்பட வேண்டும். இக்கட்டான காலத்தில், உலகின் பல்வேறு நாடுகளும் ஒன்றுப்பட்டு, கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டால் தான், உலக மக்களுக்கு நலன்கள் வழங்க முடியும் என்று அவர் கூறினார்.