இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்வதேச முதலீட்டு உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. உள்ளூர் மற்றும் சீன தொழில் முனைவோர்களின் பிரதிநிதிகள், மும்பையிலுள்ள சில வெளிநாட்டு துணை தூதரகங்களின் அலுவலர்கள் ஆக சுமார் 300 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். முன்பையிலுள்ள சீனத் துணைத் தூதரகத்தின் அலுவலர் நியூ சிங் இம்மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தினார்.
இருப்புப் பாதை, நெடுஞ்சாலை, மின்னாற்றல் முதலிய அடிப்படை வசதிகளின் கட்டுமானத் துறையில் மகாராஷ்டிரா மாநிலத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு வெற்றி பெற சீனா விரும்புவதாக நீயூ சிங் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆணையம் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தது.