சீன அரசுத் தலைவர் ஹூ சிந்தாவ் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிற்ஸ்டீனி லகார்டு அம்மையாரை நவம்பர் 2ஆம் நாள் பிரான்சின் கேன்ஸ் நகரில் சந்தித்துரையாடினார்.
தற்போதைய நிலைமையில், முதன்முதலாக பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகரிப்பை நிதானப்படுத்திச் சந்தையின் நம்பிக்கையை மறுசீரமைத்துப் பொருளாதார நெருக்கடி மேலும் தொடர்வதைத் தடுக்கப் பல்வேறு தரப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உலகப் பொருளாதாரத்தின் வலிமையான தொடர்வல்ல மற்றும் சமச்சீரான அதிகரிப்பில் பொருளாதாரத்தின் வலிமையான அதிகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இரண்டாவது உலகப் பொருளாதாரத்தின் வலிமையான தொடரவல்ல மற்றும் சமச்சீரான அதிகரிப்பை நனவாக்குவதோடு பல்வேறு வடிவத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புவாதங்களை உறுதியாகப் புறக்கணித்துப் பொருளாதாரக் கட்டமைப்புச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று இச்சந்திப்பின் போது ஹூ சிந்தாவ் வலியுறுத்தினார்.
சர்வதேச சமூசம் மேலும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று லகார்டு தெரிவித்தார். முக்கிய நாடான சீனா, உலகப் பொருளாதாரத்தின் நிதானத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்கை ஆற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.