20 நாடுகள் குழு தலைவர்களின் 6வது உச்சி மாநாடு 3ம் நாள் பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்றது. தற்போதைய நிலைமையில், 20 நாடுகள் குழு, ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் எழுச்சியை வெளியிட்டு, உலகப் பொருளாதார அதிகரிப்பையும் நிதி நிதானத்தையும் முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும். பல்வேறு நாடுகளும், பொருளாதார வளர்ச்சியில் சமநிலைத்தன்மையை உருவாக்க வேண்டும். ஒத்துழைப்பில் ஒன்றுக்கு ஒன்று நலன் தருவதை நாட வேண்டும். புத்தாக்கத்தை இடைவிடாமல் முன்னேற்ற வேண்டும். கூட்டு வளர்ச்சியில் செழுமை காண வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹூ ச்சின் தாவ் ஆலோசனை தெரிவித்தார்.
2008ம் ஆண்டு நிதி நெருக்கடி நிகழ்ந்ததற்கு நிந்தைய நிலைமையில், உலகம் பொருளாதார நிதி நெருக்கடியை மட்டும், எதிர்நோக்க வில்லை. அமைப்புமுறை, முறைமை கொள்கை, கருத்து வளர்ச்சி வழிமுறை ஆகிய பிரச்சினைகளும் தோன்றியுள்ளன என்று ஹூ ச்சின் தாவ் சுட்டிக்காட்டினார்.