இவ்வாண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிராமப்புறங்களிலுள்ள பாழடைந்த ஆபத்தான வீடுகளுக்கான சீரமைப்பு திட்டப்பணிகள் இப்போது நடைமுறையாக துவங்கின என்று இப்பிரதேசத்தின் வீடமைப்பு, நகர மற்றும் கிராமக் கட்டுமானப் பணியகம் அண்மையில் கூறியது.
இச்சீரமைப்புத் திட்டப்பணிகளுக்கு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் 101 கோடி யுவான் மதிப்புள்ள பல்வேறு நிலை உதவித் தொகையை பயன்படுத்தியுள்ளது. இதில் தேசிய நிலை உதவித் தொகை 37 கோடியே 60 லட்சம் யுவான் என்பது குறிப்பிடத்தக்கது.