ஐ.நா பாதுகாப்பவையின் சீர்திருத்தத்தில், வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்து, அரசுகளுக்கிடை பேச்சுவார்த்தையை முக்கிய வழியாகக் கொண்டு, ஒட்டுமொத்தத் தீர்வு முறையை நாட வேண்டும் என்று ஐ.நாவில் உள்ள சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி வாங் மின் தெரிவி்த்துள்ளார்.
66வது ஐ.நா பேரவை 8ம் நாள் முழு அமர்வு நடத்தி, பாதுகாப்பவையின் சீர்திருத்தப் பிரச்சினையை விவாதித்தது. நியாயமான, உரிய சீர்திருத்தம் செய்து, பாதுகாப்பவையின் அதிகாரத்தையும், பயனையும் அதிகரித்து, "ஐ.நா சாசனத்தில்" விதிக்கப்பட்ட அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் கடமையை பாதுகாப்பவை மேலும் செவ்வனே நிறைவேற்றுவதற்கு சீனா ஆதரவளிப்பதாக வாங் மின் தமது உரையில் தெரிவித்தார்.