சீனத் திபெத் வளர்ச்சி பற்றிய 3வது கருத்தரங்கு 10ம் நாள் கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் துவங்கியது. திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டுப் பரவல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத் துறை வளர்ச்சி, திபெத்தில் வெளிநாட்டு முதலீடு முதலியவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
கிரேக்கம், சீனா ஆகியவை உள்ளிட்ட பல நாடுகளின் அரசு அலுவலர்கள், நிபுணர்கள், அறிவாளர்கள், தொழில் முனைவோர், செய்தியாளர்கள் ஆக 200க்கு அதிகமானோர் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். சீன அரசவையின் செய்தி அலுவலகத்தின் தலைவர் வாங் சென் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். வரலாற்றில் மிகச் சிறந்த வளர்ச்சிக் கட்டத்தில் திபெத் உள்ளது என்று அவர் கூறினார்.
திபெத் வளர்ச்சி பற்றிய இக்கருத்தரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரேக்கத்தின் பல்வேறு வட்டாரங்கள் திபெத் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும், இரு தரப்பு நட்புறவுப் பரிமாற்றத்துக்கும் இது துணை புரியும் என்று கிரேக்க-சீன வணிகச் சங்கத்தின் தலைவர் கான்ஸ்டன்டையின் யானிடிஸ் துவக்க விழாவில் கூறினார்.